தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. பாலின பாகுபாட்டை கலைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் அதிகாரமளித்தலை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்களும் தரமான கல்வியை தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலமாக ஒற்றைப் பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு நிலையான வாய்ப்புத் தொகையாக குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த வைப்புத் தொகையானது தமிழ்நாடு பவர் பைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடேட்டில் வரவு வைக்கப்பட்டு வரும். குழந்தைக்கு 18 வயதை எட்டும் வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது. 18 வயதை குழந்தைய அடையும் பொழுது வட்டியுடன் சேர்த்து முழு தொகையையும் பெற முடியும்.
மேலும் இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவும் வகையில் ஆறு வயதில் இருந்து ஆண்டுதோறும் 1800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்கத்தொகையை பெற விரும்பும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தில் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.