திமுக கடந்த தேர்தலின் பொழுது மகளிர்க்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மகளிர் உரிமைத்தொகை அமல்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்த நிலையில் மகளிரின் வங்கி கணக்குகளில் நேரடியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகுதியுள்ள சில பெண்கள் இந்த திட்டத்தில் இணையாமல் இருக்கின்றனர்.
குறிப்பாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாதது, ஆவணங்கள் இல்லாதது, அல்லது தகவல் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் தொகை கிடைக்காமல் உள்ளது. அதனால் மீண்டும் இந்த திட்டத்தில் பெண்களை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. விடுபட்ட மகளிர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்காக தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஜூன் நான்காம் தேதி( நாளை) முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முகாம்களில் தகுதியுள்ள பெண்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் இந்த விண்ணப்பத்திற்கு தேவையானது அடையாள அட்டை,வங்கி கணக்கு விவரங்கள், மற்றும் குடும்ப அட்டை முகாம்களில் சரிபார்க்கப்படும். இந்த முகாம்கள் இலவசமாக நடத்தப்படுவதால் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் மகளிர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட பிறகு ஜூலை 2025 முதல் புதிய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.