மாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!

Photo of author

By Madhu

மாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!

Madhu

தமிழக அரசு பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் புதுமைப்பெண் திட்டம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பெண் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது.

மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநீற்றலை குறைப்பதற்காகவும் அவர்களுடைய திறனை உணரவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார சூழ்நிலையில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் மாணவிகளுக்கு இத்திட்டம் நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியம். இத்திட்டத்தின் மூலம் மாதம் தோறும் உதவித் தொகையாக மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 1000 ரூபாய் செலுத்தப்படும். மேலும் இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐடிஐ ,தகுதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற படிப்புகள் என பெண் தனது உயர்கல்வியை படித்து முடிக்கும் வரை உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் தங்கள் பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.