நிலம் என்பது முக்கிய சொத்தாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு பட்டா பெறுவதில் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் எனவும் புதிய முறையை பத்திரப்பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துக்களை இ சேவை மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ நேரடியாக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பிரிவு தேவையற்ற பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின் நில அளவுத்துறை இயக்குனர் கூறுகையில் தமிழக அரசின் உத்தரவின்படி பட்டா பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும். சில சொத்துக்களில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் பட்டா மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பட்டா வாங்குவதில் சிரமம் இருந்ததால் தமிழக அரசு பட்டா சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது.
பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி கொடுத்துள்ளனர். முன்பிருந்த காலகட்டத்தில் சர்வேயரால் ஒரு மாதத்திற்கு 30 மனுக்கள் அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 80 என்ற அளவில் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் சிரமம் அடையாமல் இருக்க தமிழக அரசு புதிய செயல்பாட்டினை கொண்டு வந்துள்ளது.