மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

Photo of author

By Madhu

மாநிலங்களவை எம்பி தேர்தல்; போட்டியின்றி 6 வேட்பாளர்கள் தேர்வு?

Madhu

மாநிலங்களவை எம்பி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவிற்கு நான்கு இடங்களும் அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் யார் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்ட வைகோ, எம் சண்முகம் ,முகமது அப்துல்லா, பி வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரன், ஆகிய 6 எம்பி களின் பதவிக்காலம் ஜூலை 27ஆம் தேதி உடன் நிறைவடைகின்றது. அதனை அடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய எம்பிகள் தேர்வு செய்ய வேண்டும்.

வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எம் பி களை தேர்வு செய்ய தயாராக இருக்கின்றனர். அதிமுக சார்பில் தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி வேப்பமனுக்கள் தாக்கல் தொடங்கியது.

சுயேச்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் மற்றும் மநீக தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,அமைச்சர்கள் ஏவா வேலூ, ராஜேந்திரன், எம்பிக்கள் டி ஆர் பாலு, கனிமொழி, கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப் பெருந்தகை, திருமாவளவன், ராமச்சந்திரன், பே சண்முகம், முகமது அபுபக்கர், ஆகியோர் உடன் இருந்தார்கள்.

மேலும் பகல் ஒரு மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கட்சியின் வேட்பாளர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். திமுக சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக இரண்டு பேரும் சுயேச்சி வேட்பாளர்கள் மூன்று பேர் என மொத்தம் ஒன்பது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை வாக்குகள் எண்ணபட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படாத பொழுது திமுக மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.