ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

Photo of author

By Madhu

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

Madhu

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். ஆதார் அட்டையின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அன்றாட தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது ஆதார் அட்டை மூலம் பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அட்டையின் மூலமாக கடன் வழங்க தொடங்கியுள்ளனர்.

இந்த கடன் பாதுகாப்பு பெற்றது என்பதால் எந்தவித சொத்து உத்தரவாதமும் தேவைப்படுவது கிடையாது. மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் ஏற்ற விரிவான நிதி ஆதாரமாக செயல்படுகின்றது. இந்த கடனை பெற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் கடனை பெற்றுக் கொள்ளலாம்.

மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். நிரந்தர முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர் ஐடி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கட்டாயம் தேவைப்படுகின்றது. ஆன்லைன் மூலம் இந்த கடன் பெற எளிதாக விண்ணப்பிக்க முடியும்.

முதலில் ஆதார் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். தனிநபர் கடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு ஆதார் எண் மற்றும் தகவலை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்படும் ஓடிபி மூலம் அனைத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம். பிறகு மூன்று நாட்களுக்குள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆதார் எண் மற்றும் பேன் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது.