ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

Photo of author

By Madhu

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

Madhu

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதியே பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே எந்தெந்த மாதங்களில் பொது விடுமுறை வரப் போகும் என்பதை மாணவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஜூன் மாதத்தில் பொது விடுமுறை என பக்ரீத் பண்டிகை மட்டுமே வந்த நிலையில் அதுவும் சனிக்கிழமை வந்ததால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதி மொஹரம் பண்டிகை மட்டுமே வர உள்ளது.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை நாள் வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் தள்ளி உள்ளது. சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது. ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் போதிய விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கவலையடைந்துள்ளனர்.