ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எங்கு போனாலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில் ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையின் நகலை சரி பார்க்கும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு அடிப்படையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.
இதன் மூலமாக ஆதார் அட்டையை நாம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று தங்கள் தகவல்களை அப்டேட் செய்வதை குறைத்துக் கொள்ளலாம் ஆதார் அமைப்பு புதிய நடைமுறையை கொண்டு வர இருக்கும் நிலையில் நவம்பர் மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கைரேகை மற்றும் கண் விழி பதிவு தவிர முகவரி மற்றும் பிற தகவல்களை புதுப்பிக்கும் முறை தற்போது எளிமையாக பட இருக்கின்றனர். பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் பதிவுகள், ஓட்டுநர் உரிமங்கள், பாஸ்போர்ட்டுகள், பான் கார்டுகள் போன்ற பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் இருக்கும் தளங்களுடன் ஆதார் தளமும் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றனர்.
இதன் மூலமாக பொது மக்கள் எளிதாக சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை அமல்படுத்தினால் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். இது குறித்து ஆதார் தலைமை நிர்வாகி கூறுகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகின்றோம்.
இதன் மூலம் விரைவில் கைரேகை மற்றும் கருவிழி பதிவு தவிர மற்ற எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இந்த செயலி மூலமாக தொலைபேசி எண், பெயர், முகவரிகள் மற்றும் தவறான பிறந்த தேதி திருத்தங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். கியூ ஆர் கோடு மூலம் ஆதார் தகவல்களை அனுப்பும் வசதியும் கொண்டு வரப்படும்.