தேர்தலின் பொழுது அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது..
அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது.
ஆனால் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மீண்டும் இதற்கான முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. ஜூன் மாதத்தில் 9000 முகாம்கள் மூலம் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மகளிர் உரிமை பெற்று வரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு வரும் மகளிர் உரிமை தொகை ரத்து செய்யப்படலாம் என அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்நிலையில் தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கலந்து கொண்டு விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 45 நாட்களுக்குள் மகளிர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு முடிவு எடுக்கப்படும்.
ஜூலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. உள்ளூர் அளவில் தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து ஸ்டாலின் திட்டத்தை பற்றி உங்களுக்கு கூறுவார்கள். நீங்கள் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், ஆவணங்கள் என்ன சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.