விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

Photo of author

By Madhu

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; அரசு வழங்கும் 100 சதவீதம் பெறலாம்..உடனே விண்ணபியுங்கள்!

Madhu

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் இலவசமாக மாடு வழங்குதல், ஆடு வழங்குதல், நாட்டுக்கோழி போன்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதற்காக சிறிய அளவிலான பண்ணைகளையும் அமைத்து தருகிறது.

மேலும் அதற்கு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோழி கொட்டகை மானியத்துடன் அமைத்து தரப்படுகின்றது. அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனை செய்து வருகின்றனர்.

விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கோழி கொட்டகை அமைத்து கொடுக்கப்படும், இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

இந்த கோழிப்பண்ணை அமைப்பதற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படும். இதில் 50 சதவீதம் மானியம் பண்ணை அமைப்பதற்கும், 50% மானியம் கட்டிடம் கட்டுவதற்கும் வழங்கப்படுகின்றது.

மேலும் தங்களுடைய கிராமத்துக்கு அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்குச் சென்று கோழிக்கோட்டையை இலவசமாக பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் டிஆர்டிஓ டிபார்ட்மெண்டுக்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

50 கோழிகள் இருப்பது அவசியம். கோழி கொட்டகை அமைக்க விண்ணப்பிக்க ஆறு மாதத்தில் இருந்து 50 கோழிகளை தொடர்ந்து வளர்த்திருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க தங்களிடம் சொந்த இடம் இருப்பது அவசியம். தாங்கள் விண்ணப்பிக்கக்கூடிய கிராமத்திலேயே தொடர்ந்து வசிபவராக இருக்க வேண்டும்.. கோழி கொட்டகை விண்ணப்பிக்க ஆதார் அட்டை நகல், பண்ணை அமைக்க இருக்கும் இடத்தின் சிட்டா அடங்கல் நகல், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.