தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

Photo of author

By Madhu

தலைவர் பதவியால் மன நிம்மதி போய்விட்டது; ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அன்புமணி!

Madhu

பாமகவில் அண்மைக்காலமாகவே ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் பாமக தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து மன நிம்மதி போய்விட்டதாக தெரிவித்தார். தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் அதனை பாமக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் நடந்த சில சம்பவங்களை அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதனால் பாமக நிர்வாகியால் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர் இந்நிலையில் அன்புமணி  மனநிம்மதி போய்விட்டதாக கூறியது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி பல்வேறு கருத்துகளை முன் வைத்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும் அதற்காக தான் ஜூலை 25ஆம் தேதி ராமதாஸ் பிறந்தநாள் அன்று நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கும் கொடுங்கோள் ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி தமிழகத்திற்கு நல்லாட்சியை நாம் அமைக்க வேண்டும். மக்களே ஒன்று கூடுங்கள் என்ற நோக்கத்தில் தான் நடைபயணம் செல்வதாகவும் தெரிவித்தார்.

100 நாள் நடைபயணம் மேற்கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பாமக தலைவர் பதவியில் இருக்கும் அன்புமணியை நீக்கி தானே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால் தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என அன்புமணி கூறினார் தானே கட்சித் தலைமை பதவியில் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

இருவரும் இதுபோல எதிரும் புதிருமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அன்புமணி பேசியிருந்தார்.

தந்தையிடம் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார் அதே சமயத்தில் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.