பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Photo of author

By Madhu

பான் கார்டு பெற கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Madhu

பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண், வருமானவரித்துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் 10 இலக்க எண் தற்போதைய நடைமுறையில் விண்ணப்பதாரரின் பெயர், பிறப்புச் சான்றிதழ், ஏதேனும் அடையாளச் சான்றிதழ் இருந்தாலே பான் கார்டு விண்ணப்பிக்க முடியும்.

வரியைப்பு தடுக்கும் வகையில் தற்போது புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். அந்த நடைமுறையின் அடிப்படையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பான் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வரி தாக்கலின் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதி என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைக் கொண்டு பான் கார்டு பெறலாம். ஆனால் இனி வருமானவரித்துறையின் போர்டலின் வழியாக ஆதார் சரி பார்ப்பின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

2025 டிசம்பர் 31ம் தேதிகுள் ஆதார் அட்டை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும்.. பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்றால் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அவர்களுடைய பான் அட்டை செயல்படாது.

பலமுறை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு பெற விரும்புவர்கள் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, இந்திய கடவுச்சீட்டு போன்றவையை வைத்து விண்ணப்பிக்கலாம் ஆனால் தற்போது ஆதார் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது