மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோயில்கள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில்களில் முருகனின் ஆறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, அதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மதுரையில் ஒரே இடத்தில் ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சாய்பாபா பக்தர்கள், ஆன்மீகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றனர். ஆறுபடை வீடுகளுக்கு முன் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
இந்த கலை நிகழ்ச்சியில் சிறுவர் மற்றும் சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகின்றது. இந்த முன்னணி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்கு படுத்துவதுடன் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுபடை வீடுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை மாதிரி வீட்டில் தரிசனம் செய்து மன நிம்மதி அடைகின்றனர் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முருக பக்தர்கள் மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
அதனால் முருகனின் ஆறுபடை வீடுகளின் பின்பகுதியில் எட்டு லட்சம் சதுர அடிக்கு மேடை மற்றும் இருக்காய் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசமும், திருப்புகழ், முருகன் பாடல்களை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் ஏராளமான பக்தர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருவார்கள் எனவும் கூறப்படுகின்றது