ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

Photo of author

By Madhu

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

Madhu

அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார்.

கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது அந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணி தான் என விமர்சனங்கள் எழுந்த பிறகு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

25 வருடம் ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்தேன் நான் தோற்பதற்கு யார் காரணம் பிஜேபி தான் தோர்த்தேன் என வெளிப்படையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டதை ஜெயக்குமாரை வைத்து தான் அறிவித்தார்/

அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் இந்நிலையில் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்கள் அனைத்தும் ஜெயக்குமார் மூலமாகவே தான் கருத்துக்களை இபிஎஸ் கூறி வந்தார். பாஜகவுடன் எந்த ஒரு கூட்டணி இல்லை என விடாப்படியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அச்சத்தில் இருக்கின்றார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என கவலையாக கூறியிருக்கின்றார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமார் ஏமாற்றமடைந்தார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றது இபிஎஸ் பக்கம் நின்றும் கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

சென்னையில் இருக்கக்கூடிய ஜெயக்குமார் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார், ஆனால் தற்போது அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் போது அந்த பக்கமே வராமல் அந்த நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வருகின்றது. தற்போது ஜெயக்குமாறும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு நல்லதல்ல எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ பார்ம் எடப்பாடி கொண்டு வர வேண்டும் என ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.