தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது.
பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய வழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதி கூட்டுறவு செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் ஒரு சில புகார்கள் அவ்வப்போது ஏற்படுகின்றது.
அண்மையில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழக அரசு உடனடியாக விளக்கம் தந்துள்ளது.
கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். பயிர் கடனை பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் ஒரிஜினல் சிட்டா, அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டா, போன்றவற்றை ஆவணங்களாக கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி ஜாமீன் போடும் நபர்களின் போட்டோவும் அதனுடன் இணைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் தற்போது கூறியிருக்கின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம் இவ்வாறு ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுகிறது என புகார் அளிந்துள்ளது. இந்த புகாரை அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர் பெறப்பட்டு கடன் வழங்குவதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது