2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார்.
அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தால் இந்த மண் தந்தை பெரியார், பயன்படுத்திய மண் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் இழிவுபடுத்தி பேசும் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் பேசி இருக்கின்றார். தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளில் நோக்கத்தை புரிந்து அவர்கள் பாடம் புகட்ட தயாராக இருக்கின்றனர்.
அதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார். எங்கள் கொடியிலும் எங்கள் பெயரிலும் இருக்கும் அண்ணாவை ஒருபொழுதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
அண்ணாவின் கொள்கைக்கு மாறாக குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார் அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
கச்சத்தீவு முதல் காவேரி வரை தமிழ்நாட்டை அதன் உரிமைகளை அடகு வைத்ததும் வைக்க துணிவதும் திமுக தான் என குறிப்பிட்டு பேசியிருக்கின்றார்.
மேலும் தமிழ்நாட்டின் அமைதி வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டு தருவேன். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டு இருக்கின்றார்