அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

0
19

அரசு மருத்துவமனையில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் அங்கேயே சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறுவதற்கு முன்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறப்பதினால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக இருப்பது பிறப்புச் சான்றிதழ் தான்.

அதனால் இந்த சட்டம் கடந்த 2023 முதல் அமலில் உள்ளது. ஆர். ஜி.ஐ அலுவலகம் வெளியிட்டு அறிவிப்பில் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன் 7 நாட்களுக்குப் பிறகு சான்றிதழ் தாய்மார்களுக்கு வழங்க வேண்டும்

இந்த சான்றிதழ் எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏதேனும் ஒரு வகையால் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் .இந்தியாவில் தற்போது பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்து வருவதினால் அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறப்பதினால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற முடியும். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleவிசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!
Next articleபள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!