
DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், திமுக, அதிமுக, தவெக என கட்சிகளனைத்தும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னணி கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருவது வழக்கமாகிவிட்டது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக அரசு, அனைத்தையும் விட திமுக ஒரு படி மேலே சென்று தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் பிம்பத்தை தகர்த்தெறியும் வகையில், திமுக ஒரு திட்டத்தை தீட்டி உள்ளது. கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி, அதனையும் திமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.
இதன் காரணமாக செந்தில் பாலாஜி கரூரை விட்டு, கோவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூரில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ வி.சி. மணிவண்ணன் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்த முக்கிய முகமாக அறியப்படுவதாலும், கரூர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கையும், அந்தஸ்தையும் பெற்றுள்ளதாலும் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அவர், தற்போதைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மேலும் கரூரில் திமுக அமைப்பை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்து வருகிறார். இவருக்கு துணையாக கரூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் எம்.கண்ணன், சின்னசாமி, பொன்முடி போன்றோரும் இருக்கிறார்கள்.