ADMK: எம்.ஜி.ஆர் இறந்த நேரத்தில் ஜெயலலிதா-ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு துணையாக நின்றவர் சசிகலா. அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு தற்காலிக பொதுச் செயலாளராக பதிவியேற்றார். சிறுது காலம் அந்த பதவியிலிருந்த இவர் 2017 செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கபட்டார். அப்போது பொதுச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என அனைவரையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இவர்கள் மூவரும் மூன்று திசையில் பயணம் செய்து வந்தனர். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி கணக்குகள் தொடங்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் திமுக கூட்டணியில் இணைய போவதாக பேசப்பட்டு வருகிறது.
அண்மை காலமாக டிடிவி தினகரன் திமுகவிற்கு சாதகமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது. ஓபிஎஸ்யும் இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் சசிகலா திமுகவிற்கு எதிராக பேசி வருவதால் அவர் தனித்து விடப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. சசிகலா தற்போது அதிமுக கூட்டணியிலும் இல்லை, திமுக கூட்டணிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலை தொடர்ந்தால் அவர் அரசியலிலிருந்து அடியோடு அகற்றப்படுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

