இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!
இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர் அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம்.
இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் ஏலம் விடப்பட்டு உள்ளன. 1968 ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக மக்கள் அங்கிருந்து சிறிது சிறிதாக வெளியேற தொடங்கினர். இதன் காரணமாக சலேமி நகரத்தில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துவிட்டது. எனவே அதனை மீட்டு எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் விதமாக வீடுகளை, தற்போது புதிய விலைகளை கூறி உள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து முன்பு போலவே இந்த நகரங்களில் எல்லாம், மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டுமென்ற முயற்சியில், அங்கு குறைந்த விலையில் வீடுகள் விற்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்நகரின் மேயர் அங்கு 400 க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு தயாராக இருகிறது. ஆனால் வீடுகளை வாங்க யாரும் முன் வரவில்லை என்பதால் விரைவில் இது சுற்றுலா நகராக்க மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டில் பணத்தின் மதிப்பு யூரோ என்று சொல்லப்படும். எனவே ஒரு யூரோவிற்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 87 ரூபாய் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. எனவே அங்கு 87 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது