நாட்டில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி நோய்த் தொற்று பாதிப்பு!

0
198

நாட்டின் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்தது. ஆனாலும் இன்று ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து 510 ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 61405 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 536 ஆக அதிகரித்திருக்கிறது நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்கள் தாக்குவதற்கு 442 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதன் அடிப்படையில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 84 ஆயிரத்து 655 அதிகரித்து இருக்கிறது. அதோடு நாட்டில் 407 பேர் புதிய வகை தொற்றான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 868 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 1805 பேர் குணமடைந்த சூழ்நிலையில், 3 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Previous articleமூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் நாளிலேயே கோட்டை விட்ட இந்திய அணி!
Next articleபெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்! சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here