41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

0
75

41000 புள்ளிகளுக்கு மேல் மையம் கொண்ட சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்

பெரும்பாலான உலக பங்கு சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்ற நிலையில் இந்திய பங்கு சந்தை ஏறு முகத்தில் வர்த்தகம் ஆகி வருவது இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய பங்கு சந்தைகளான பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் ஆகிய மூன்று சந்தைகளும் -0.19 முதல் -0.38 வரை தொடர்ந்து இறங்கு முகத்தில் வர்த்தகமாகி வந்தன.

அதே போல ஆசியாவில் வர்த்தகம் ஆகும் பெரும்பாலான ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வந்தன. குறிப்பாக ஆசிய பங்கு சந்தைகளில் அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.47 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது.

நேற்று மாலை வர்த்தகம் முடிவடைந்த நிலையில் இந்திய பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் 41,080 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் ஆகிய நிலையில் நிறைவடைந்தது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த நிலையிலேயே சென்செக்ஸ் 41,161புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,163 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. பின்னர் மதியம் 2.15 மணி அளவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது.

அதே போல மும்பை பங்கு சந்தை குறியீடு நிஃப்டி நேற்று மாலை வர்த்தக முடிவில் 12,100 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது 12,132 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக12,144 என்கிற அதிகபட்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 23 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகியது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்பதியுள்ளது..

இதனையடுத்து சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வந்தன. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட 2,551 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. இதில் 1,168 பங்குகள் ஏற்றத்திலும், 1,192 பங்குகள் இறக்கத்திலும், 191 பங்குகள் எந்தவொரு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு வந்தன. மேலும் மொத்தம் வர்த்தகம் ஆகும் 2,551 பங்குகளில் 43 பங்குகளின் விலை 52 வார அதிகபட்ச விலையிலும், 100 பங்குகளின் விலை 52 வார குறைந்தபட்ச விலையிலும் வர்த்தகமாகி வந்தன.

குறிப்பாக பார்தி இன்ஃப்ராடெல், யூபிஎல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஹீரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி, ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.50 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அடுத்ததாக ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.83 டாலர் என்ற நிலையிலும் வர்த்தகமாகி வந்தது.