பிரபல நடிகை கடத்தல் வழக்கு! நடிகை காவியா மாதவனிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணை!

0
136

சென்ற 2017 ஆம் வருடம் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு பல்சர் இதற்கெல்லாம் காரணம் திலீப்தான் என்று தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தார்கள்.

அதன்பிறகு அவர் ஜாமினில் வெளிவந்தார். சில ஆதாரங்களினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது காவியா மாதவன் பெயர் இடம் பெற்றதால் காவியா மாதவனுக்கும்,பல்சர் சுனிலுக்கும், ஏற்கனவே தொடர்பிருந்ததா என்று காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

எஸ்பி மனோசந்திரன் மற்றும் டிஎஸ்பி பைஜூ தலைமையில் காவியா மாதவனிடம் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும், தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பிய சூழ்நிலையில். காவியா மாதவன் தன்னிடம் வீட்டில் விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மதியம் காவியாவின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை செய்தார்கள்.

இதற்கு முன்னதாக திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சுவாரியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிகிறது.

Previous articleவிசாரணைக்காக கைதிகளை அழைத்து வரும்போது காவலர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
Next articleபெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!