குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

0
101

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து,குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றது.இந்த குப்பை வண்டிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகள் செல்வோர் மற்றும் அலுவலகத்திற்கு செல்வார் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி குப்பை லாரிகளை இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரி கொளத்துரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தார்.

மேலும் அவர் தாக்கல் செய்த அந்த மனுவில் குப்பைகளை கொண்டு செல்லும்போது வளைகள் போட்டு கொண்டு செல்லாததால் அவர் சாலையில் பறந்து துர்நாற்றம் ஏற்படுத்துவதோடு,சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் செயல்படுவது போன்று இரவு நேரங்களில் குப்பை வண்டிகளை இயக்கினால் இதுபோன்ற எந்த இடையூறுகளும் இருக்காது என்றும் எனவே பள்ளி அலுவலக நேரங்களில் குப்பை வண்டிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் குப்பை வண்டிகளை குந்த நேரத்தில்தான் இயக்க வேண்டும் என்று நேரம் நிர்ணயம் செய்ய முடியாது என்று கூறி இந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

author avatar
Pavithra