ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

Photo of author

By Madhu

ஆதாரில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்; இனி ஸ்கேன் செய்தால் போதும்!

Madhu

ஒவ்வொருவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஆதாரம் இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் நிலை உருவாகியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு என எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது.

ஆனால் சில சமயங்களில் ஆதார் அட்டையை கையில் எடுத்துச் செல்ல முடியாததால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்ப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

வருங்காலங்களில் UIDAI  ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த செயலி தங்கள் போனில் இருந்தால் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆதார் மீது எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும்.

இனி ஆதாரை ஜெராக்ஸ் எடுத்துச் செல்லும் அவசியம் இருக்காது. இந்த செயலியில் ஆதார் தகவல் க்யூஆர் கோடு வடிவில் இருக்கும் இதை ஸ்கேன் செய்தால் தங்களுடைய ஆதார் சமர்ப்பிக்கப்படும்.

தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு ஆதார் சமர்ப்பிக்கும் பொழுது முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமோ அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதி மூலம் ஆதார் தொடர்பான செயல்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும் நேரத்தை வீணடிப்பதும் தவிர்க்கப்படும் என என்பது குறிப்பிடத்தக்கது