“ஆனி அடி போட்டாலும் கூனிக் குடியேறாதே” ஆனி மாதம் சுப காரியங்கள் செய்ய போகிறீர்களா? இதோ உங்களுக்குத்தான்!!

0
245
Aani matham in tamil
#image_title

Aani matham in tamil: இந்து சாஸ்திரங்களின்படி நாம் எந்த ஒரு நல்ல காரியங்கள் செய்தாலும் அதற்கு நல்ல நேரம், காலம், மாதம் என அனைத்தும் பார்போம். நாம் எந்த ஒரு காரியமும் தொடங்க வேண்டும் என நினைத்தால் அது நல்ல காரியமாக நடக்க வேண்டும் தான் நினைப்போம். அந்த வகையில் குறிப்பிட்ட மாதங்கள் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம், சில மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

இதனை ஆன்மீக ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாக பார்த்தால் அதில் காரணம் இருக்கும். அதனால் தான் சில மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்றும், சில மாதங்களில் குழந்தை பிறந்தால் நல்லது அல்ல எனவும் தெரிவித்திருந்தனர் நம் முன்னோர்கள்.

அந்த வகையில் ஆனி மாதத்தில் (tamil month aani) சுபகாரியங்கள் செய்யலாமா வேண்டாமா என இந்த பதிவில் காண்போம்

ஆனி மாதம்

பிற மாதங்கள் போன்று இல்லாமல் இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன. எனவே இந்த மாதத்தை பெரிய மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் பகல்பொழுதின் அளவு அதிகமாக இருக்கும். மேலும் ஆனி மாதம் பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் சில சுப நிகழ்வுகளை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனி மாதத்தில் திருமணம் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும். வீட்டின் மூத்த பிள்ளைகளுக்கு இந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டாம். இளைய பிள்ளைகளுக்கு இந்த மாதத்தில் திருமணம் செய்யலாம். ஆனி மாதத்தில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

ஆனி மாதத்தில் வீட்டின் மூத்த பிள்ளைக்கு நிச்சயத்தார்தம் செய்ய வேண்டாம்.

மேலும் ஆனி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாம்.

ஆனி மாதத்தில் குழந்தை பெயர், தாலி கயிறு போன்றவற்றை சுபதினங்கள் பார்த்து செய்து கொள்ளலாம்.

புதிய வீடு கட்டுவதற்கு மனையடி சாஸ்திரம் பார்த்து மனை போட கூடாது. வீடு தொடர்பான எந்த ஒரு சுபகாரியங்களையும் செய்ய வேண்டாம். இந்த மாதத்தில் எந்த ஒரு செயலை செய்தாலும் அது விருத்தி அடையாது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது ஆனி மாதத்தில் சுபநிகழ்வுகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

ஆக்கல் ராசியான கடக ராசிக்கு விரைய பாவம் மிதுனம். மிதுன ராசி அழித்தல் ராசியாக வருவதால், ஆனி மாதத்தில் தான் சூரிய பகவான் மிதுன ராசிக்கு வருகிறார் இதனால் இந்த மாதத்தில் பூமி பூஜை போன்றவை போடக்ககூடாது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!