சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
124

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைத்து கூறி ராஜேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஒலிம்பியாட் செஸ் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாததற்கு நிபந்தனை இன்றி தமிழக அரசு சார்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பன்னாட்டு அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டும். நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர்.

ஆகவே அவர்களுடைய புகைப்படம் ஏன் விளம்பரங்களில் இடம்பெறவில்லை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதாவது இடையூறு ஏற்பட்டாலோ, அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.