9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!!

0
35
#image_title

9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!!

பிரபல நடிகை சங்கீதா அவர்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அதுவும் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கீதா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ் கிரண் அவர்கள் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஒளிப்பதிவாளர் சரவணன் அவர்களை 2000வது ஆண்டில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி 14 வருடங்கள் கழிந்து 2014ம் ஆண்டில் நகர வரிதி நடுவில் நான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு நடிகை சங்கீதா 9 ஆண்டுகள் கழிந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் குஞ்சக்கோ பரமன். நடிப்பில் உருவாகியுள்ள “சாவெர்” என்ற திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிகை சங்கீதா அவர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

சாவெர் திரைப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகை சங்கீதா அவர்கள் “இனிமேல் என்னை அதிக திரைப்படங்களில் காணலாம். நான் இனிமேல் தொடர்ந்து நடிக்கப் போகிறேன்” என்று கூறியிருந்தார்.