பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்!

0
128
Actress' sensational information in money laundering case! Who will not!
Actress' sensational information in money laundering case! Who will not!

பண மோசடி வழக்கில் நடிகை சொன்ன பரபரப்பு தகவல்! யாரெல்லாம் மாட்டுவார்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் மிக முக்கியமான சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்ததாக புகார்கள் பல உள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க விற்கு இடையே பிளவு ஏற்பட்ட போது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டிடிவி தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் பலர் ஜாமீனில் வந்து விட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் இன்னும் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் சந்தர்பத்தில், இது போன்ற பல மோசடிகளில் ஈடுபட்டு,  சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் டெல்லி அமலாக்கத் துறை உயர் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து பெங்களூருவில் உள்ள சுகேஷ் சந்திரசேகரன் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சத்து ஐம்பதாயிரம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரது பங்களாவுக்கும் சீல் வைத்தனர். இதற்கிடையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசாரிடம் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரனுக்கு எதிராக பண மோசடி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போன இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரனின் பண மோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.