ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை விட மிகப் பெரிய பெருமாள் சிலை எங்கு உள்ளது தெரியுமா?

0
190

ஆதி திருவரங்கத்து அரங்கன் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய நீளமான அரங்கர் என தெரிவிக்கிறார்கள். 28 அடி திருவரங்கம், 21 அடி திருவட்டாறு, 22 அடி சிங்கவரம், 24 அடி திருவனந்தபுரம், 18 அடி தலை பின்னால் 5 தலை ஆதிசேஷன் படம் விரித்து நிழல் கொடுக்க, தலைமாட்டில் திருமகள் அமர்ந்திருக்க, கால்மாட்டில் மண்மகள் வலதுகாலை தாங்குகிறார்.

இதற்கிடையே தொப்பூழியில் பூத்திருக்கும் தாமரை மீது அமர்ந்திருக்கும் நான்முகன் கீழே தலை அருகில் கருடாழ்வார் தெற்கு பக்கம் உள்ள தலையை கிழக்கு முகமாக திரும்பியுள்ள பெருமாள் வலது கையை தலைக்கு அடியில் வைத்து இடது கையை மடித்து கடக முத்திரையைக் காட்டுகிறார்.

பிரம்மதேவனுக்கு உபதேசம் செய்யும் நிலை வலதுகாலை மண்மகள் தொடை மீது வைத்திருக்கிறார். இரு தேவியருடன் போக சயனம் திருவரங்கத்தில் யோகசனம்.

ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம் பிரும்மாண்ட புராணம் ஸ்ரீரங்க திருமணத்தை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னதாக தோன்றிய சந்திர புஷ்கரணி எனும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக இத்தலத்தில் விளங்குகிறது.

156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும் 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும், உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதர் வழிபாட்டில் இருக்கிறார்.

நாட்டில் மிகப்பெரிய பெருமாள் சிலை திருச்சியிலுள்ள ஸ்ரீ ரங்க ரங்கநாதர் சிலை என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதிதிருவரங்கம் தளத்தில் மிகப்பிரமாண்டமான 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இந்த தலம் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது.

லட்சுமிதேவி நாள்தோறும் வந்து பூஜை செய்யும் தலமாகும் என்றும் சொல்லப்படுகிறது. மதுரகவி ஆண்டாள் ஆழ்வார் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்கள் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த தலமாகவும் இது விளங்குகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தை இந்த தளத்தில்தான் அரங்கேற்றினார் என்பது மேலும் சிறப்புக்குறியதாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட தகவல்களை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாத பெருமாள் நாட்டில் மிகப்பெரிய பெருமாள் சிலை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல தமிழகத்திலேயே மிகமிகப்பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவரங்கத்தில் தான் இருக்கிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய பெருமாளின் சிலை ஸ்ரீரங்கத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், அதனை விட மிக மிகப் பெரிய பெருமாள் சிலை இந்த தலத்தில் அமைந்திருப்பது இந்த தலத்தின் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே உள்ளூர் பக்தர்களால் பெரியபெருமாள் என இந்த கடவுள் அழைக்கப்படுகிறார்.

திருமாலின் திருவடிகளை தன்னுடைய மடியில் பூமாதேவி மகிழ்ச்சியுடன் ஏந்திக்கொள்ள, கீழிருந்து கருடன் அடியவனாக ஏவல் புரிய காத்திருக்க ஆதிசேஷனும் அரண்மனையின் மேல் அந்த அனந்தனே விரித்த படத்தால் குடைபிடிக்க யோக நித்திரை புரிகிறான் ஆதிதிருவரங்கன்.

வலக்கை சிரசின் பக்கமாக அபய முத்திரை அருள்கிறது, இடக்கை நாபிக்கமலத்தில் விழித்தெழுந்த நான்முகனுக்கு நான் நான்மறைகளை நல் உபதேசம் செய்யும் ஞான முத்திரை காட்டுகிறது.

பெருமாள் என்றாலே வைகுண்டம் தானே அதற்கு ஏற்றவாறு வைகுண்ட ஏகாதசியன்று இந்த தளத்தில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

பெருமாளுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பௌர்ணமி அன்றும், மூலவருக்கும், ரங்கநாயகி அம்மையாருக்கும், சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.