என்னை சீரியஸான நடிகனாக காட்டியது அந்த படம்தான்!.. அஜித் ஓப்பன் பேட்டி!…

Photo of author

By அசோக்

என்னை சீரியஸான நடிகனாக காட்டியது அந்த படம்தான்!.. அஜித் ஓப்பன் பேட்டி!…

அசோக்

ajithkumar

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. சமீபத்தில் பத்மபூஷன் விருதை ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.

vali

அதன்பின் ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் ‘வாலி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான படம். என்னை அந்த படத்தில்தான் சீரியஸ் நடிகராக மக்கள் பார்க்க துவங்கினார்கள் என நம்புகிறேன். அதற்கு முன்பும் எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. ஆனால், எனக்கு பல கதவுகளை வாலி திறந்தது’ என பேசியிருக்கிறார். அஜித்தின் படங்கள் சரியாக போகாத நிலையில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் வாலி. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து உருவான இப்படம் 1999ம் வருடம் வெளியானது. இந்த படத்தில்தான் ஜோதிகா அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.