கனவு போல இருக்கு! ஷாலினிக்கே எல்லா கிரெடிட்டும்!.. ஃபீல் பண்ணி பேசிய அஜித்!.

Photo of author

By அசோக்

கனவு போல இருக்கு! ஷாலினிக்கே எல்லா கிரெடிட்டும்!.. ஃபீல் பண்ணி பேசிய அஜித்!.

அசோக்

shalini

அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

ajith

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது நேற்று ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.

இந்நிலையில், விருது வாங்கிய பின் பேசீய அஜித் ‘என்னைச் சுற்றி நடக்கும் அனைத்தும் மிகவும் அற்புதமான உணர்வை தருகிறது. கனவில் வாழ்வது போல இருக்கிறது. யாராவது கிள்ளி எழுப்பி விட்டுவிடுவார்களோ என பயப்படுகிறேன். எனக்காக பல தியாகங்கள் செய்து, எப்போதும் பக்கபலமாக இருப்பவர் ஷாலினி. நான் வாழ்வில் சாதித்த அத்தனைக்கும் அவருக்குதான் கிரெடிட் கொடுக்க வேண்டும். என் குடும்பதான் மிகப்பெரிய பலம். என் மனைவி நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். என் கஷ்டமான காலத்தில் எனக்கு ஒர் தூணாக இருந்துள்ளார். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.