தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ள நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக வில் முழு நேர அரசியலில் இறங்கி இருக்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களை வெகுவாக கவர்ந்தது. பிரச்சாரத்தில் மத்திய அரசின் திட்டங்களையும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் அரசின் திட்டங்களையும் விமர்சித்து பேசி வாக்குகளை பெற்றார். உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது அதன் பிறகு அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்ற நிலையில் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அரசின் திட்டங்களுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றார். மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் உதயநிதி கலந்து கொண்ட நிலையில் மேடை ஏறி எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தது பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் உதயநிதி பங்கேற்க உள்ள அனைத்து நிகழ்வுகளும் அடுத்த சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
\திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இரும்பலால் அவதிப்பட்டு வருவதினால் சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் அவர் கலந்து கொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்க தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இரும்பல் இருக்கும் செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.