இன்று நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் விறு விறு!

0
102

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தாக சொல்லப்படுகிறது. முறைகேடு புகார் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில், இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பமானது தமிழகம் முழுவதும் 279 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தடையில்லாத மின்சாரம், கணினி வசதி உணவு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையை பொறுத்து இந்த மேதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வார்டு வாரியாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்குகள் எண்ணப்படும் பகுதிக்கும் வேட்பாளர்கள் அவர்களுடைய தலைமையில் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளரின் தலைவர் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு கைபேசியை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது அதன்படி தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன தபால் வாக்குகளை பிரித்து யாருக்கு வாக்களிக்க பெற்றிருக்கிறது என்பது அனைத்தும் வேட்ப்பாளர்களுக்கும் தெரியும் விதத்தில் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு யாருக்கு அந்த வாக்கு பதிவாகி இருக்கிறது என பார்த்து அவருடைய கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு வரப்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு 14 மேஜைகளில் வைக்கப்படும். அதன்பிறகு கண்ட்ரோல் பேனலில் இருக்கும் சீல் வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வார்டு வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும் என்று தெரிகிறது.

இது ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாகக் கருதப்படும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பொருத்தவரையில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதன் காரணமாக, அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

பேரூராட்சி வார்டுகளை பொறுத்தவரையில் ஒரு வார்டுக்கு 10 முதல் 20 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்ததால் ஓரிரு சுற்றுகளில் முடிவுகள் வெளியாகி விடும். இதேபோன்று ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்படும் என்று சொல்லப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை பொறுத்தவரையில் முழுமையாக வீடியோ கேமரா மூலமாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் இருக்கின்ற அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.

அதோடு ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்படும், தபால் வாக்குகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும் என்ற காரணத்தால், காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.

முதல் சுற்று முடிவு முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியவரும். அதேசமயம் 11:00 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஒவ்வொன்றாக தெரிந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.