பாமக கட்சி நிறுவனர் ராமதாக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏராளமான மோதல்கள் இருந்து வருவதாக என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் சோளிங்கநல்லூரில் இரண்டாம் கட்டமாக ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் க்யூ ஆர் கோடு உள்ளது. கட்சியின் உறுப்பினர்கள் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நிதி செலுத்தி கொள்ளலாம். உறுப்பினர் அடையாள அட்டை பெற்ற பிறகு ஐந்து ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கட்சிக்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது. அதன் காரணமாக ஒவ்வொரு உறுப்பினரும் கட்டணமாக ஐந்து ரூபாய் உடன் கூடுதல் தொகை செலுத்தலாம். மேலும் சித்திரை மாநாட்டை நடத்தியது நான் கிடையாது, உறுப்பினர்கள் ஆகிய நீங்கள் தான். சித்திரை முழு நிலவு மாநாடு வெற்றி பெற பாமக தொண்டர்களே முழுக்க முழுக்க காரணம். சிறு பிரச்சனை கூட ஏற்படாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்று சேர்ந்தார்கள். சித்திரை மாநாட்டிற்கு பிறகு இளைஞர்களின் மனநிலை மாறி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வகை டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை தயார் செய்து விட்டேன். ஆனால் அதை வெளியிடும் சூழல் இல்லாததால் தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது. பாமக உறுப்பினர் அடையாள அட்டைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் மையப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திலக பாமாவை நீக்கியதாக அறிக்கை வந்த சில நிமிடங்களில் அவர்தான் பொருளாளர் என நான் அறிக்கை கொடுத்தேன். கட்சியில் இருப்பவர்களை பொதுக்குழு மூலமே நீக்க முடியும். நான் பொதுக்குழுவாள் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். மேலும் பாமகவில் இருந்து யாரை நீக்கி அறிவிப்பும் வந்தாலும் அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள் பொறுப்பில் தொடர்வதாக நான் அறிக்கை வெளியிடுவேன். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தடுத்த செயல்திட்டம் இருக்கிறது. உரிமை மீட்பு பயணத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் துடித்துக் கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.