கலைஞர் மகளிர் உரிமைத்தகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா; அரசு சொன்ன அப்டேட் இதோ!!

Photo of author

By Madhu

கலைஞர் மகளிர் உரிமைத்தகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா; அரசு சொன்ன அப்டேட் இதோ!!

Madhu

திமுக தேர்தல் வாக்குறுதியாக மாதம் தோறும் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். தகுதி வாய்ந்த மகளிர் ஒரு சிலருக்கு இத்திட்டம் கிடைக்காததால் மீண்டும் பயனாளிகளை இணைக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனால் தகுதி வாய்ந்த மகளிர்கள் ஜூன் மாதம் முதல் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் எனவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

சுமார் 9000 முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் முகங்கள் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஒரு வாரத்தில் தேவையான இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் முகாம்கள் அமைக்கப்படும் எனவும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு பெண்கள் முன்கூட்டியே விண்ணப்பித்த நிலையில் அதில் ஒரு சில பெண்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பளித்தும் வகையில் மீண்டும் முகங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பயனாளியாக உள்ள பெண்கள் அரசு பணிகளில் சேரும் பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் சுமார் 15,000 மகளிர்களை திட்டத்தில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.