திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட ,சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.
குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை தடுக்கவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் பணியாற்ற பணியாளர் இருந்தால் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினதவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் தொழில் முனைவோர்களாக மாற்றவும் பாதுகாப்பிற்காகவும் குழந்தைகள் திருமணம் உதவி பெண்கள் உள்ளிட்டவை விழிப்புணர்வு வழங்கிட செயல்படுத்தி வருகின்றது.
மகளிர் அதிகாரம் மையத்தில் தரவு நுழைவு பணியாளர் ஒரு பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது. அதனால் பெண்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.