2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒன்றாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் பயனாளியாக சேர்க்கப்படவில்லை இந்நிலையில் தமிழகத்தில் 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மட்டுமே உரிமைத் தொகையை பெறுகின்றனர். தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பம் பெறப்படும்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெறும் நிலையில் இந்த முகாமின் மூலம் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ,100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வங்கி பாஸ்புக் மற்றும் மொபைல் எண் ஆகியவை முக்கியமான ஆவணம்.மேலும் விண்ணப்பதாரர்கள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமிற்கு நேரடியாக சென்று தங்களுடைய விண்ணப்பங்களை கொடுக்கலாம்.