உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Madhu

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை; உடனே விண்ணப்பியுங்கள்!!

Madhu

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்காஜம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறுகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள நபர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20,000 மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கு உதவித்தொகை 2500 என மொத்தம் 22,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதில் ஈமச்சடங்கிற்காக உதவித்தொகை 2500 ரூபாய் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டிருந்தால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக இருக்கக்கூடிய நபரின் இயற்கை மரணத்திற்காக உதவி தொகை 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

மேலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, திருமண உதவித் தொகை, கல்வித் தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் மற்றும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை பெற நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து சுமார் ஆறு மாதத்திற்குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விண்ணப்பிப்பதற்கு காலதாமதம் ஆனால் விண்ணப்பங்களுக்கு உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற முடியும். அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுக்குள் விண்ணப்பித்து முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.