பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

0
72

அமித்ஷாவே வந்தாலும் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில், அதிமுகவில் நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடந்தது.

அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். நியாய விலை கடை அரிசி 5.5 லட்சம் மெட்ரிக் டன்னை வெளிச்சந்தையில் அமைச்சர் காமராஜ் விற்பனை செய்திருக்கிறார். என்று குற்றம் சாட்டி இருக்கிறோம். ஆனால் அந்த குற்றச்சாட்டை மறுக்காமல் அறிக்கை நாயகன் ஸ்டாலின் இன்று தெரிவிக்கிறார் காமராஜ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் 2500 ரூபாய் பணமானது அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவில்லை. எனவும் முதியோர் உதவித்தொகை வந்ததுபோல குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அந்த தொகையை ஆளும் கட்சியினரே எடுத்துக் கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் கே .என். நேரு.

அதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவர்கள் எந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சரை பணப் பயிர் செய்யும் விவசாயி என குற்றம்சாட்டி இருக்கிறார் கே. என். நேரு அவர் மேற்கு வங்கத்தையும், தமிழ்நாட்டையும் பாஜக குறி வைத்திருக்கிறது எப்படிப் பார்த்தாலும்,திமுக ஆட்சியை பிடிக்கும் எத்தனை அணிகள் அமைத்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவே வந்து இங்கே வேலை பார்த்தாலும், திமுக தான் ஆட்சி அமைக்கும் அவர்களின் திட்டம் இங்கே பலிக்காது. மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள் என்று உறுதிபட தெரிவித்தார்.