சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!

சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரையில் மூன்று பேர் வெளியேறி இருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை என பிக்பாஸ் அறிவித்திருக்கின்றார். தீபாவளி நெருங்குவதால் காரணமாக எலிமினேஷணிலிருந்து விலக்கு அளித்திருக்கின்றார். இதன் காரணமாக நேற்றைய தின போட்டியில், ஹவுஸ் மேட்ஸ் குதூகலமாக வந்தார்கள். இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில், பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒவ்வொரு பண்டிகைக்கும் … Read more

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கின்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் துரைக்கண்ணு மரணம் சம்பந்தமாக அவதூறான கருத்து தெரிவித்த ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் அமைச்சர் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் அவருடைய செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் … Read more

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இவங்கதான் முன்னிலை! அதிர்ச்சியின் உச்சத்தில் முக்கிய தரப்பு!

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இவங்கதான் முன்னிலை! அதிர்ச்சியின் உச்சத்தில் முக்கிய தரப்பு!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு என்ன ஆரம்பிக்கப்பட்டன. பீகார் மாநிலத்தில் இருக்கும் 55 மையங்களில், வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜகவின், ஐக்கிய ஜனதா தளத்துக்கும், காங்கிரஸ், ஆர் ஜேடி கூட்டணிக்கும், நேரடி போட்டி நிலவிவருகின்றது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்ஜேடி கூட்டணி … Read more

இது யாருக்காக செய்யப்படுகிறது உள்நோக்கம் என்ன! பிரேமலதா சரமாரி கேள்வி!

இது யாருக்காக செய்யப்படுகிறது உள்நோக்கம் என்ன! பிரேமலதா சரமாரி கேள்வி!

வேல் யாத்திரையின் நோக்கம் என்ன கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்த படுகிறதா என்று திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளை, மூன்று மாதத்திற்குப் பின்னர் தான் திறக்க வேண்டும் தமிழக பாஜக சார்பாக வேல் யாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது. அந்த யாத்திரையின் நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு முன்பாக … Read more

சூறாவளி பிரச்சாரத்திற்கு தயாரான டிடிவி தினகரன்! அதிர்ச்சியில் எதிர் தரப்பினர்!

சூறாவளி பிரச்சாரத்திற்கு தயாரான டிடிவி தினகரன்! அதிர்ச்சியில் எதிர் தரப்பினர்!

டிடிவி தினகரனை காணவில்லையே என்று செய்தித்தாள்களில் செய்திகள் உலா வந்த நேரமோ என்னவோ அவர் தேர்தல் களத்தில் இறங்குவதற்காக தயாராகிவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் அவர்களுக்கு உண்மையாகவே தலைக்கு மேல் வேலை இருக்கின்றது. சசிகலா விடுதலை சம்பந்தமான பணிகளை அவர் கவனிக்க வேண்டும். தேர்தல் பணிகள் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும், தன்னுடைய ஒரே மகளின் திருமண ஏற்பாடுகளையும் கவனித்து கொள்ள வேண்டும். இப்படியான சூழ்நிலையில், சசிகலா விடுதலை … Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்! கூலாக பதில் சொன்ன செல்லூர் ராஜு!

அரசியலில் இதெல்லாம் சாதாரணம்! கூலாக பதில் சொன்ன செல்லூர் ராஜு!

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான் என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கின்றார். மதுரையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் கைகாட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என்று முருகன் தெரிவித்திருப்பது சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் விமர்சனம் செய்வது வழக்கமானதுதான். அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சியினர் தற்போது நண்பர்களாக தான் இருக்கிறார்கள். தங்களுடைய கட்சி மக்களிடையே … Read more

ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ், ஆகியோரின் வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்த மதுரை ஆதீனம். அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ், ஆகியோர் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். இவருடைய வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பாகவே கணித்து அமெரிக்க மக்களிடம் தெரிவித்து இருக்கின்றேன், என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கின்றார். கமலா ஹாரிஸ், மற்றும் ஜோ பைடன், முரண்படாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று ட்ரப்புக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் … Read more

வாழ்த்து மழையில் நனைந்த கமல்! நெகிழ்ச்சி மடல்!

வாழ்த்து மழையில் நனைந்த கமல்! நெகிழ்ச்சி மடல்!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார். ஒருபுறம் சினிமா, மறுபுறம் அரசியல், என்று அதிரடியாக களம் இறங்கி இருக்கின்றார் கமலஹாசன். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அவருடைய 66வது பிறந்தநாளை சென்ற சனிக்கிழனையன்று கொண்டாடினார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த … Read more

இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! இந்த மாவட்ட இளைஞர்கள் எல்லாம் ரெடியா இருங்க!

இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! இந்த மாவட்ட இளைஞர்கள் எல்லாம் ரெடியா இருங்க!

திமுக இளைஞர் அணியில் தர்மபுரி திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் அமைப்பாளர் துணை அமைப்பாளர் உறுப்பினர்களை நிரப்புவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின். கோவை மேற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் வடக்கு ,மற்றும் கிழக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, மற்றும் மத்திய திருப்பூர் ,தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு, ஆகிய மாவட்டங்களில் காலியாக இருந்து வரும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கடலூரில் பரபரப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கடலூரில் பரபரப்பு!

தமிழக அரசு அறிவித்து இருக்கின்ற 10 சதவீத தீபாவளி போனஸ் 20 சதவீதமாக அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடலூர் பணிமனையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பண்டிகை காலம் முன் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்கவும் தொழிலாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.