டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்!

0
90
Bangalore won the toss and elected to bat Warm flying game!
Bangalore won the toss and elected to bat Warm flying game!

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐ.பி.எல். லின் 14 வது கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் முதலில் டாஸ் செய்தபோது அதில் விராட் கோலி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். எனவே பஞ்சாப் அணி இதில் முதலில் பந்து வீசுகிறது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், 7 வெற்றி மற்றும் 4 தோல்வி என பதினான்கு புள்ளிகளுடன் 3-வது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

மேலும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்ததன் காரணமாக சுற்று வாய்ப்பில் முன்னிலையில் வகிக்கிறது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாலும், பஞ்சாப் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்களும் ஆரோக்கியமான நிலையை எட்ட வேண்டும். ஏதாவது ஒன்றில் தோற்றாலும் வெளியேற்றம் தான்.

அதனால் இதன் காரணமாக இன்றைய போட்டிகளில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.