திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

Photo of author

By Madhu

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இந்த மாதங்களில் சென்றால் ஏழுமலையானை உடனே பார்க்கலாம்!!

Madhu

https://news4tamil.com/tirumala-tirupati-devasthanams-attention-devotees-going-to-tirupati-darshan-of-seven-hills-canceled-for-8-hours/

Tirumala Tirupati Devasthanam: புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையின் பொழுது பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படுவதினால் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. மேலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முன்பதிவு டோக்கன்கள் தரிசன டிக்கெட், ட்ராவல் பேக்கேஜ், என்ற பலவிதமான வழிகள் உள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கின்றன.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 18 முதல் 30 மணி நேரம் வரை தரிசன டோக்கன் பெற்றவர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் இருக்கின்றது. கூட்டத்தில் சிக்காமல் எப்படி தரிசனம் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம். திருப்பதி தேவஸ்தானம் கோவிலை பராமரித்து வரும் நிலையில் பக்தர்களின் நன்மைக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருப்பதியில் சிறப்பு உற்சவங்கள் மற்றும் திருவிழா சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இருக்கும் கூட்டத்தை விட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதினால் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். அதனால் ஜூலை மாதம் தரிசனத்திற்கு செல்பவர்கள் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதத்தில் முன்பதிவு செய்வது அவசியம். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியும்.

மேலும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் 10 நாட்கள் வரை மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும், அதனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் கூட தரிசனத்திற்கு சென்றால் அதிக நேரம் வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் செய்ய முடியும்.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய நாட்களில் திருப்பதியில் கூட்டம் மிக குறைவாக காணப்படும் என்பதினால் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அந்த நாட்களில் சென்றால் சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.