#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

0
61

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி மாணவர்களின் நலன்கருதி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர்த்து,அரியர் பேப்பரை எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு,UGC மற்றும் AICTE ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

தற்போது இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு(AICTE) கடிதம் எழுதியதாகவும், அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க மறுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

author avatar
Pavithra