திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!

0
79

உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு மணமேடையில் வந்து நடனமாடும் படி வற்புறுத்திய மணமகனை கண்டு மணமகள் ஆத்திரத்தில் திருமணத்தையும் நிறுத்தி வரதட்சனையும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்ய ராஜ் மாவட்டத்தில் உள்ள திகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகளுக்கும், ரவீந்திர பட்டேல் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் மற்ற வேலைகளை கவனித்து வந்தனர். சனிக்கிழமை அன்று திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்று நடந்த சம்பவம் திருமணத்தையே நிறுத்தி உள்ளது.

 

திருமணத்தன்று மணப்பெண் மேடையில் தயாராக இருந்த நிலையில் மகனும் அவரது நண்பர்களும் குடித்துவிட்டு மேடைக்கு வந்துள்ளனர், மேடைக்கு வந்த மணமகன் மணமகளை தன்னுடன் நடனம் ஆடும்படி கேட்டுள்ளார், மணமகள் மறுத்ததால் கோபமடைந்த மணமகன் மணப்பெண் இடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். இதனை பார்த்த மணப்பெண் மற்றும் பெண் வீட்டார்கள் திருமணத்திற்கு முன்பே குடித்துவிட்டு கலாட்டா செய்யும் இவனை எப்படி ஏற்றுக் கொள்வது என திருமணத்தையே நிறுத்தி உள்ளார்கள். கொடுத்த வரதட்சணை உடனே கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

போலீசாருக்கு எப்படியோ தகவல் தெரிந்த நிலையில், அங்கு வந்த போலீசார் இடம் மணமகன் வீட்டார், மணப்பெண் மற்றும் மணப் பெண் வீட்டாரை சமாதானம் செய்யுமாறு கூறியுள்ளனர், போலீசார் எடுத்துக்கூறிய நிலையிலும் மணப்பெண் மற்றும் மணப்பெண் வீட்டார் திருமணத்திற்கு முன்பே குடித்துவிட்டு இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பின் என்னை எந்த பாடு படுத்துவார்கள் என மணப்பெண் உறுதியாக மறுத்துவிட்டார். உடனடியாக வரதட்சணையை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். மேலும் போலீசார் வரதட்சினை திருப்பித் தருமாறு மணமகன் வீட்டாரிடம் அறிவுறுத்தி சுமூகமாக முடித்து விட்டனர்.

 

செய்தியை அறிந்த மக்கள் மணப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே தைரியமான இந்த முடிவை எடுத்தது மிகவும் நல்லது என்று பாராட்டி வருகின்றனர்.

 

 

 

 

 

author avatar
Kowsalya