இந்து மதத்தின் படி ஒன்பது கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகங்கள் இந்த நவக்கிரகங்களின் நிலையைப் பொறுத்து கணிக்கப்படுகிறது. இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
நமது விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவைதான் நாம் கூறக்கூடிய ஒன்பது நவகிரகங்கள். இவற்றுள் ஏழு கிரகங்கள் வானத்தில் உள்ள கோள்களை வைத்து கணக்கிடப்படுகிறது. ராகு, கேது என்பது தீய சக்திகளை நிர்வகிக்கும் இரண்டு முக்கிய கிரகங்களாக கூறப்படுகிறது.
இந்த கிரகங்களின் சுழற்சியை பொறுத்து தான் நமது வாழ்க்கையில் நன்மைகள், தீமைகள் என மாறி மாறி வருகின்றன. இந்த கிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால், நம்மை ஒரே இரவில் ராஜாவாகவும் மாற்றிவிடும். ஆனால் தவறான இடத்தில் இருந்தால் ராஜாவையும் ஏழையாக மாற்றி விடும்.
இந்த நவகிரகங்களுக்கு பிடித்தமான உணவினை நெய்வேத்தியமாக வைத்து வணங்குவதன் மூலம் அவர்களின் ஆசீர்வாதத்தை நாம் பெற முடியும்.
1. சூரியன்:
ஞாயிறு என்பது சூரியனின் நாளாக கருதப்படுகிறது. நெருப்பின் கடவுளான இவருக்கு மிகவும் பிடித்தமான நிறம் என்பது சிவப்பு. அவருக்கு பிடித்த உணவுகள் வெல்லம், சிவப்பு பருப்பு, குங்குமப்பூ, சந்தனம், கோதுமை, சிவப்பு வண்ண பழங்கள் இந்த பொருட்களை வைத்து சூரியனை வழிபடுவது நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.
2. சந்திரன்:
நிலவானது திங்கள்கிழமையை குறிக்கும். சந்திரனுக்கு வெள்ளை நிற பொருட்கள் அனைத்தும் பிடிக்கும். அரிசி, பால், தயிர், நெய், உப்பு, சர்க்கரை, முந்திரி, வெள்ளை இனிப்புகள், முள்ளங்கி இவற்றை பிரசாதமாக படைக்கலாம். இதன் மூலம் வாழ்க்கையில் அமைதி நிலவும்.
3. செவ்வாய்:
செவ்வாய் கிரகத்திற்கு உகந்த கிழமை செவ்வாய். செவ்வாய் கிரகத்திற்கான கடவுள் வாயுபுத்திரன் ஹனுமன். இவருக்கு மிகவும் பிடித்த பொருள் சிவப்பு பருப்பு, வெல்லம், மாதுளை, அனைத்து சிவப்பு வண்ண பழங்கள். இரத்தம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இந்த கிரகம் குணப்படுத்தும்.
4. புதன்:
புதன் கிரகம் மெர்குரி என்று அழைக்கப்படுகிறது. புதன் கிரகத்திற்கு பிடித்த நிறம் பச்சை. எனவே பச்சைப் பருப்பு, பச்சை நிற பழங்கள், பூசணிக்காய், பச்சை நிற இனிப்பு இவற்றை வைத்து வழிபடுவதன் மூலம் மன சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.
5. வியாழன்:
வியாழன் என்பது பிரகஷ்வதி கடவுளை குறிக்கும். இவருக்கு பிடித்தமான நிறம் மஞ்சள். எனவே லட்டு, சுண்டல், மஞ்சள் நிற பழங்கள் இது போன்றவைகளை பிரசாதமாக படைக்கலாம். இதன் மூலம் அனைத்து சிறுநீரக பிரச்சனைகளும் குணமாவதுடன், நோயற்ற வாழ்வை வாழலாம்.
6. சுக்கிரன்:
சுக்கிரனுக்கு உரிய கிழமை என்றால் வெள்ளிக்கிழமை. இவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் திகழ்கிறார். இவருக்கு வெள்ளை நிறத்தில் உள்ள பொருட்களை வைத்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். எனவே அரிசி, சர்க்கரை, ரவை, வெள்ளை நிற பழங்கள் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்யலாம். இவரை வழிபடுவதன் மூலம் பண கஷ்டங்கள் நீங்கும்.
7. சனி:
பெயரைக் கேட்டாலே அனைவரும் பயப்படக்கூடிய ஒரு கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். இவருக்கு பிடித்தமான நிறம் கருப்பு. இவருக்கு கருப்பு உளுந்து, கருப்பு எள், கடுகு எண்ணெய், கருப்பு சுண்டல், கருப்பு பழங்கள் இவற்றை படைக்கலாம். எதிரிகளின் தொல்லைகளில் இருந்து இவர் நம்மை காப்பாற்றுவார். இவரின் கருணை பார்வையை பெறுவது நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்.
8. ராகு, கேது:
ராகு கேது என்பது சந்திரனின் ஏறுமுனை மற்றும் இறங்கு முனையை குறிக்கும். ராகு கேது என்பது ஒரு நிழல் கிரகம் ஆகும். அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் மற்றவரும் அவர் உடனே செல்வர். இவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே நகரக்கூடியவர்கள்.இவர்களுக்கு பிடித்தமான நிறம் என்றால் கருப்பு.
எனவே கருப்பு எள், கருப்பு பழங்கள், கருப்பு நிற பூக்கள், இனிப்புகள் இவற்றை வைத்து வழிபடலாம். இவர்களை வழிபடுவதன் மூலம் நமக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குவார்கள்.