பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

Photo of author

By Madhu

பெண்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு; உடனே விண்ணப்பியங்கள்!!

Madhu

பெண்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச தையல் இயந்திரம், மானிய கடன் திட்டம், மகளிர் சொந்த தொழில் செய்ய கடனுதவி என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றனர்.

பெரும்பாலும் கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர்கள், உதவி இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் அதிகளவு இருக்கின்றது. அந்த திட்டங்களில் பயன்பெற நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வது அவசியம். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எட்டாவது தளத்தில் வரும் 12ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

அதன் பிறகு உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உறுப்பினராக பதிவு செய்யும் பெண்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இத்திறன் பயிற்சி மேற்கொள்வதால் சுயதொழில் புரிய மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் செயல்படுத்தப்படும் சுயதொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.