ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் அவ்வப்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தம் 35,083 ரேஷன் கடைகள் இருக்கும் நிலையில் இந்த கடைகளில் 2,25,24,784 குடும்ப அட்டைகள் இருக்கின்றது. தமிழகத்தில் அரிசி இலவசமாக வழங்கப்படும் நிலையில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மானிய விலையில் உணவுப்பொருட்களை பெற்று வருகின்றனர்.
ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். அதில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பெறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அடைந்து வருவதால் உடனடியாக அவற்றை திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.
இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் முகமூலம் ரேஷன் கடையில் உள்ள திருத்தங்களை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.