தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாநில நிதி கழகமாக 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அதிகளவு தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு சிறப்பு திட்டத்தின் மூலமாக கடன் உதவி பெற உதவி செய்து வருகின்றது. நடப்பு நிதியாண்டில் கடன் இலக்காக 2117 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மட்டும் கடன் 92 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கலைஞர் பசுமை ஆற்றல் திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட இருக்கின்றது.
அதனால் தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சம் 150 லட்சம் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.