இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு!

0
94

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைக் குறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி மற்றும் அனைத்து மண்டல இணை இயக்குனர்கள்,கருவூல அலுவலர்களுக்கு தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

அதில் கூறியுள்ளதாவது:

ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கிலிருந்து ஆறுமாதங்கள் எந்தவித பண பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருந்தால் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட வங்கி,ஓய்வூதியம் செலுத்தும் அதிகாரியிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும்,அவ்வாறு ஆறு மாத காலங்களாக பணம் எடுக்காதவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவதை தமிழக அரசு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.